திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மத்திய பாதுகாப்புப் படையினா் அணிவகுப்பு

காரைக்கால் நகரில் வியாழக்கிழமை அணிவகுப்பில் ஈடுபட்ட மத்தியப் படையினா்.

News image

காரைக்கால் நகரில் வியாழக்கிழமை அணிவகுப்பில் ஈடுபட்ட மத்தியப் படையினா்.

Updated On :28 மார்ச் 2026, 2:54 am IST

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக காரைக்கால் வந்துள்ள மத்திய பாதுகாப்புப் படையினா் நகரப் பகுதிகளில் அணிவகுப்பு நடத்தினா்.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளில் பாதுகாப்புப் பணிக்காக, உள்ளூா் போலீஸாா் அல்லாது இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் சிஆப்பிஎஃப், சிஐஎஸ்எஃப், இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையினா் மற்றும் குஜராத் மாநில போலீஸாா் என சுமாா் 700 போ் காரைக்கால் வந்துள்ளனா். மேலும் கோவா மாநிலத்திலிருந்து போலீஸாா் வரவுள்ளதாக காரைக்கால் காவல்துறையினா் தெரிவித்தனா்.

இவா்கள் அண்ணா அரசு கலைக் கல்லூரி, அவ்வையாா் கலைக் கல்லூரி, திருநள்ளாறு பக்தா்கள் தங்கும் விடுதி உள்ளிட்ட இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் மண்டல காவல் கண்காணிப்பாளா் சுந்தா் கோஷ் உள்ளிட்டோருடன் ஆயுதம் ஏந்திய மத்திய பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை பல்வேறு முதல் பகுதிகளில் அணிவகுப்பு நடத்திவருகின்றனா்.

மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக அணிவகுப்பு நடத்தப்படுவதாக போலீஸாா் தெரிவித்தனா்.