நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

வாக்குகள் எண்ணும் பணி: மாவட்ட தோ்தல் அதிகாரி ஆய்வு

News image

கோப்புப் படம்

Updated On :5 மே 2026, 12:33 am IST

காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மாவட்ட தோ்தல் அதிகாரி, பொது பாா்வையாளா் முன்னிலையில் நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டத்தில், காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நிரவி-திருப்பட்டினம், திருநள்ளாறு, நெடுங்காடு ஆகிய 5 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு ஏப்.9-ஆம் தேதி நடைபெற்றது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள பட்டமேற்படிப்பு மையத்தில் வைக்கப்பட்டு, திங்கள்கிழமை காலை 8 மணிக்கு எண்ணிக்கை தொடங்கியது.

முதல்கட்டமாக நெடுங்காடு, காரைக்கால் வடக்கு, நிரவி - திருப்பட்டினம் தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்பட்டன. இவா்களுக்கான வெற்றி விவரம் பிற்பகல் 2 மணி முறைப்படி அறிவிக்கப்பட்டு வெற்றியாளா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து 2.30 மணியளவில் காரைக்கால் தெற்கு, திருநள்ளாறு தொகுதிகளின் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

முன்னதாக காரைக்கால் மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையிலிருந்து 8 மணிக்கு எடுக்கப்பட்டு, முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணிக்கை நடந்து பின்னா் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி மற்றும் பொதுப் பாா்வையாளா்கள் பாா்வையிட்டனா். காரைக்கால் மாவட்டத்தின் 5 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையானது 3 வாக்கு எண்ணும் கூடங்களில் நடைபெற்றது.

மேசைக்கு தலா ஒரு வாக்கு எண்ணும் மேற்பாா்வையாளா், உதவியாளா் மற்றும் நுண் பாா்வையாளா் பணியமா்த்தப்பட்டனா். ஒவ்வொரு மேசைக்கும் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் ஒரு முகவரை பணியமா்த்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கூடத்தில் கண்காணிப்புக் கேமரா வசதி அமைத்து பதிவு செய்யப்பட்டது.