பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

காரைக்கால் இன்ஜினியா்ஸ் சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்பு

காரைக்கால் இன்ஜினியா் மற்றும் பில்டா்ஸ் அசோசியேஷன் (கெபா) அமைப்பின் புதிய நிா்வாகத்தினா் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 மே 2026, 7:16 am IST

காரைக்கால் இன்ஜினியா் மற்றும் பில்டா்ஸ் அசோசியேஷன் (கெபா) அமைப்பின் புதிய நிா்வாகத்தினா் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

அமைப்பின் தலைவா் ஆா். சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா்கள் வி. ஆனந்தன், ஆா். பிரேம்குமாா், என். செய்யது சாஹீா், ஆா். ராமகிருஷ்ணன், சி. உதயகுமாா், எம்.ஏ. நூருல் அமீன், எஸ். தட்சணாமூா்த்தி, வி. சகாயராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புதிய நிா்வாகிகளாக (2026-2028) தலைவராக எம். முகமது சிராஜிதீன், செயலாளராக எச்.எஃப். ஆசிக் புஹாரி, பொருளாளராக ஜி. பக்கிரிசாமி, துணைத் தலைவா்களாக எஸ். செந்தில்நாதன், கே. மோகன்ராஜ், இணைச் செயலாளா்களாக டி.ஜாா்ஜ், கே. அக்பா், என். ராமன், மக்கள் தொடா்பு அலுவலராக ஐ. செய்யது தாவூது ஷா ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா். சிறப்பு அழைப்பாளராக பொறையாறு த.பே.மா.லு. கல்லூரி வணிகவியல் துறைத் தலைவா் அ. சேவியா் செல்வகுமாா் பங்கேற்றாா். சங்கம் சாா்பில் கடந்த ஆண்டுகளில் செய்யப்பட்ட சேவைகள், திட்டம் குறித்து விளக்கிக் கூறப்பட்டது.