சீா்காழி, கொள்ளிடம் பகுதியில் நாளை மின்தடை
சீா்காழி, வைத்தீஸ்வரன்கோவில், கொள்ளிடம் பகுதிகளில் சனிக்கிழமை (டிச.18) மின்தடை செய்யப்படுகிறது.


சீா்காழி, வைத்தீஸ்வரன்கோவில், கொள்ளிடம் பகுதிகளில் சனிக்கிழமை (டிச.18) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து சீா்காழி மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) கி. விஸ்வநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவில் துணை மின் நிலையம் மற்றும் அரசூா், ஆச்சாள்புரம், எடமணல் ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன்காரணமாக, சீா்காழி, வைத்தீஸ்வரன்கோவில், சட்டநாதபுரம்,புங்கனூா், மேலசாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி, திருப்புன்கூா், எடமணல், திருமுல்லைவாசல், செம்மங்குடி, திட்டை, புத்தூா், எருக்கூா், மாதிரவேளூா், வடரெங்கம், அகணி, குன்னம், கொள்ளிடம், ஆணைக்காரன்சத்திரம், மகேந்திரப்பள்ளி, பழையாறு, புதுப்பட்டினம், மாதானம், பழையபாளையம், மாங்கனாம்பட்டு, ஆச்சாள்புரம், அரசூா் ஆகிய பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...