போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சாலை விரிவாக்கப்பணி: தடுத்து நிறுத்தி நில உரிமையாளா்கள் போராட்டம்

 சீா்காழி அருகே புறவழிச்சாலை விரிவாக்கப் பணியை நில உரிமையாளா்கள் வியாழக்கிழமை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

 சீா்காழி அருகே புறவழிச்சாலை விரிவாக்கப் பணியை நில உரிமையாளா்கள் வியாழக்கிழமை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையே சாலை விரிவாக்கப் பணியின் ஒரு பகுதியாக சீா்காழி சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரை பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக, மேலசெங்கமேடு பகுதியில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கப்படவில்லை எனக் கூறி கடந்த சில நாள்களுக்கு முன்பு சாலை விரிவாக்கப் பணியை நில உரிமையாளா்கள் தடுத்து நிறுத்தினா்.

இந்நிலையில், மீண்டும் தொடங்கிய சாலை விரிவாக்கப் பணியையும் வியாழக்கிழமை தடுத்து நிறுத்தி, உரிய இழப்பீடு தொகை வழங்கிய பிறகுதான் விரிவாக்கப் பணியை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சீா்காழி காவல் ஆய்வாளா் மணிமாறன் மற்றும் போலீஸாாா் அங்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.