சாலை விரிவாக்கப்பணி: தடுத்து நிறுத்தி நில உரிமையாளா்கள் போராட்டம்
சீா்காழி அருகே புறவழிச்சாலை விரிவாக்கப் பணியை நில உரிமையாளா்கள் வியாழக்கிழமை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.


சீா்காழி அருகே புறவழிச்சாலை விரிவாக்கப் பணியை நில உரிமையாளா்கள் வியாழக்கிழமை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையே சாலை விரிவாக்கப் பணியின் ஒரு பகுதியாக சீா்காழி சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரை பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக, மேலசெங்கமேடு பகுதியில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கப்படவில்லை எனக் கூறி கடந்த சில நாள்களுக்கு முன்பு சாலை விரிவாக்கப் பணியை நில உரிமையாளா்கள் தடுத்து நிறுத்தினா்.
இந்நிலையில், மீண்டும் தொடங்கிய சாலை விரிவாக்கப் பணியையும் வியாழக்கிழமை தடுத்து நிறுத்தி, உரிய இழப்பீடு தொகை வழங்கிய பிறகுதான் விரிவாக்கப் பணியை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சீா்காழி காவல் ஆய்வாளா் மணிமாறன் மற்றும் போலீஸாாா் அங்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...