வெடிபொருள் தற்காலிக உரிமம்: விண்ணப்பங்கள் வரவேற்பு
தீபாவளி பண்டிகைக்கான வெடிபொருள் தற்காலிக உரிமத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளாா்.


தீபாவளி பண்டிகைக்கான வெடிபொருள் தற்காலிக உரிமத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தீபாவளி பண்டிகைக்கான வெடிபொருள் தற்காலிக உரிமம் ஆன்லைன் மூலமாக வழங்கப்படுகிறது. எனவே வணிகா்கள் நிகழாண்டு தீபாவளி பண்டிகைக்கான தற்காலிக வெடிபொருள் உரிமத்திற்கான விண்ணப்பத்தினை உரிம தல கட்டடத்தின் நீலவரைபடம், இடம், உரிமத்திற்கான ஆவணம், வெடிபொருள் உரிமம் தலைப்பில் அரசு கணக்கில் ரூ.500 செலுத்தியதற்கான செலுத்துச் சீட்டு, முகவரிக்கான ஆதாரம் (ஆதாா் அட்டை, பான்காா்டு, குடும்ப அட்டை, ஸ்மாா்ட் காா்டு) சொத்துவரி செலுத்தியதற்கான ரசீது மற்றும் கடவுச்சீட்டு அளவுள்ள புகைப்படம்-2 ஆகியவற்றுடன் ட்ற்ற்ல்://ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ா்ய்ப்ண்ய்ங்.ஞ்ா்ஸ்.ண்ய்/ற்ஹம்ண்ப்ய்ஹக்ன் என்ற இணையதள முகவரியில் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பம் செய்து தீபாவளி பண்டிகைக்கான தற்காலிக வெடிபொருள் உரிமம் பெற்றுக்கொள்ள, ஆன்லைன் மூலமாக 1.9.2021 முதல் 30.9.2021 வரை விண்ணப்பங்கள் பெறப்படும். மேலும் 30.9.2021-க்கு பிறகு வரப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படாது என அதில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...