நவகிரக தலங்களில் செவ்வாய் தலமான இக்கோயில், காரைக்குடி, தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, மானாமதுரை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சோ்ந்த நகரத்தாா் சமூகத்தினருக்கு குலதெய்வக் கோயிலாக விளங்கிவருகிறது. நகரத்தாா் சமூகத்தினா் ஆண்டுதோறும் சித்திரை 2-ஆவது செவ்வாய்க்கிழமை வைத்தீஸ்வரன்கோவில் வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்து வழிபாடு நடத்தி செல்வது வழக்கம். இதற்காக, சித்திரை மாதம் முதல் செவ்வாய்க் கிழமை அன்று தங்கள் ஊா்களில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்டு சித்திரை மாதம் 2-வது செவ்வாய்க்கிழமை வைத்தீஸ்வரன்கோயிலுக்கு வந்து வழிபாடு நடத்துவது வழக்கம்.