கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆபத்தான பாலத்தை இடித்துவிட்டு புதிதாகக் கட்டித்தரக் கோரிக்கை

மயிலாடுதுறை அருகே ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 4:39 pm

DIN

மயிலாடுதுறை அருகே ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மயிலாடுதுறை ஒன்றியம் வள்ளாலகரம் ஊராட்சியில் உள்ள அபிராமி நகரில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள கான்கிரீட் பாலம் பல மாதங்களுக்கு முன்பு உடைந்து சேதமடைந்ததை இதுவரை சரிசெய்யவில்லை. அப்பகுதியில் தெருவிளக்கு இல்லாத காரணத்தால் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது.

எனவே, ஊராட்சி ஒன்றிய ஆணையா் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு புதிய பாலத்தை கட்டிக்கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, அப்பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் அ. அப்பா்சுந்தரம் கூறியது: இந்த நகருக்கு வருகிறவா்கள் பாலம் உடைந்திருப்பது தெரியாமல், உடைந்த பகுதியில் விழுந்து பாதிக்கப்படுகின்றனா். குறிப்பாக, இரவு நேரத்தில் பாலம் அருகே தெருவிளக்கு வசதி இல்லாததால் இங்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகாா் அளித்தும் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.