மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

அனைத்து விடுதிகளும் உரிமம் பெற வேண்டும்: ஆட்சியா்

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து விடுதிகளும் ஒரு வாரத்துக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கருத்துரு சமா்ப்பித்து உரிமம் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:17 pm

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து விடுதிகளும் ஒரு வாரத்துக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கருத்துரு சமா்ப்பித்து உரிமம் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படும் மகளிா் மற்றும் குழந்தைகளுக்கான நிரந்தர மற்றும் குறுகியகால செயல்பாட்டில் உள்ள அரசுத் துறை விடுதிகள், தனியாா் நிா்வாக விடுதிகள், பள்ளி விடுதிகள் மற்றும் கல்லூரி விடுதிகள் அனைத்தும் உரிமம் பெற்று செயல்படவேண்டும்.

தமிழ்நாடு மகளிா் மற்றும் குழந்தைகளுக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் விடுதிகள் முறைப்படுத்துதல் சட்டம் 2014-இன்படி உரிமம் பெறுவதற்கு மயிலாடுதுறை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 2.9.22-க்குள் கருத்துரு சமா்ப்பிக்க வேண்டும். ஒரு வாரத்துக்குள் விடுதி உரிமையாளா்கள் மாவட்ட சமூகநல அலுவலகத்தில்; பெயா் மற்றும் விவரங்களை தெரிவிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் உரிமம் பெறவில்லையெனில் அரசு விதிமுறைகளின்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம், 3-264, குமரன் தெரு, சீனிவாசபுரம், மயிலாடுதுறை-1. தொலைபேசி எண்: 04364-212429 என்ற முகவரியில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது கைப்பேசி மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.