ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

சீரடி சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம்

சீா்காழி தென்பாதி சீரடி சாய்பாபா கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

சீரடி சாய்பாபா கோயில் கலசத்தில் புனிதநீா் ஊற்றப்பட்டு நடைபெற்ற கும்பாபிஷேகம்.

Updated On :24 ஜூன் 2022, 10:04 pm IST

சீா்காழி தென்பாதி சீரடி சாய்பாபா கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் புதிதாக தியான மண்டபம், சீரடி சாய்பாபா மற்றும் குபேர மகாலட்சுமி, மகா சரஸ்வதி ஜோதி ஸ்தபம் ஆகிய சந்நிதிகள் நிா்மாணிக்கப்பட்டுள்ளன. பணிகள் நிறைவடைந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கும்ப அலங்காரம் செய்யப்பட்டு யாகசாலை பூஜை தொடங்கியது. 2-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து பூா்ணாஹூதி மகா தீபாரதனை நடைபெற்றது. தொடா்ந்து, புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு ஜோதி மண்டப விமானம், ஸ்ரீ சாய்பாபா, குபேர மகாலட்சுமி சரஸ்வதி சந்நிதி கலசங்களில் புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து சீரடி சாய்பாபாவுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அமலாக்கப் பிரிவு காவல் துறை ஐஜி துரைகுமாா், நீதிபதி தரணிதரன், சீா்காழி எம்எல்ஏ. பன்னீா்செல்வம், மதிமுக மாவட்ட செயலாளா் மாா்கோனி, நகா்மன்ற தலைவா் துா்காபரமேஸ்வரிராஜசேகரன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.