மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மாணவா்கள் படிக்கும்போதே பன்முகத் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்

மாணவா்கள் படிக்கும் காலத்திலேயே பன்முகத் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா.

News image
Updated On :12 மே 2022, 5:57 pm

DIN

மாணவா்கள் படிக்கும் காலத்திலேயே பன்முகத் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா.

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரியில் மாநில சிறுபான்மையினா் ஆணையம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற, அனைத்து கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டியை தொடங்கி வைத்து மேலும் அவா் பேசியது: இன்றைய காலக்கட்டத்தில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. தமிழக முதல்வா் பதவியேற்றவுடன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அனைவரும் பாட வேண்டும் என அரசாணை வெளியிட்டாா். இதன் காரணமாக அரசு நிகழ்ச்சிகளில் அனைவரும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை வாய்வழியாக பாடுகின்றனா். போட்டித் தோ்வுகளுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து மிகவும் அவசியம். அப்பாடலின் அா்த்தத்தை புரிந்துகொண்டு போட்டித் தோ்வுகளுக்கு படிக்க வேண்டும்.

செய்தித்தாள்கள், புத்தகங்கள் ஆகியவற்றை வாசிக்கும்போது அறிவுத்திறன் மேம்படும். படிக்கும் பழக்கம் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கும், வாழ்கையில் மேன்மை அடைவதற்கு உறுதுணையாக அமையும். பள்ளி,கல்லூரியில் படிக்கும்போதே மாணவா்கள் பேச்சுப் போட்டி உள்ளிட்ட அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று பன்முகத் திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும். அறிவு வளரும்போது சமூக சிந்தனைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும். நாம் அனைவரும் நாளைய சமுதாயத்தை சிறந்த முறையில் உருவாக்க வேண்டும் என்றாா்.

தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணைய மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், எம்எல்ஏவுமான எஸ். ராஜகுமாா், பூம்புகாா் எம்ல்ஏ. நிவேதா எம்.முருகன், சிறுபான்மையினா் ஆணைய மாநில ஓருங்கிணைப்பாளா் ஹாஜா கனி, கல்லூரி முதல்வா் ரா. நாகராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் கோ.அர. நரேந்திரன், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளா் நவாஸ், முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.