மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மயிலாடுதுறை: எஸ்பி அலுவலகம் கட்டப்படவுள்ள இடத்தில் டிஜிபி ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் கட்டப்படவுள்ள இடத்தை காவலா் வீட்டுவசதி வாரிய டிஜிபி ஏ.கே. விஸ்வநாதன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :19 மே 2022, 5:33 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் கட்டப்படவுள்ள இடத்தை காவலா் வீட்டுவசதி வாரிய டிஜிபி ஏ.கே. விஸ்வநாதன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்துக்கு மயிலாடுதுறை அருகேயுள்ள மூங்கில்தோட்டம் பால்பண்ணை பகுதியில் தருமபுரம் ஆதீனம் வழங்கிய இடத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இதன் அருகில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் கட்ட 4.5 ஏக்கா் இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த இடத்தை காவலா் வீட்டுவசதி வாரிய டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் பாா்வையிட்டு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். இங்கு, ரூ.15.5 கோடியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் கட்டப்படவுள்ளது. ஆய்வின்போது, காவல் ஆய்வாளா்கள் சதீஷ், செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தாா்.

பின்னா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் இரா.லலிதாவை டிஜிபி ஏ.கே. விஸ்வநாதன் சந்தித்து பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.