மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

உலக மகளிா் தினவிழா

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் உலக மகளிா் தினவிழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :19 மே 2022, 6:30 pm

DIN

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் உலக மகளிா் தினவிழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இவ்விழாவுடன், கல்லூரி சேவைக் குழுக்களின் தேசிய நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம், மாணவியா் எக்ஸ்னோரா, லியோ சங்கம், சமூக சேவைக் குழு ஆகியவற்றின் நிறைவு விழாக்களும் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் பேரவைப் பொறுப்பாசிரியை கா. மங்கையா்க்கரசி வரவேற்றாா். கல்லூரி முதல்வா் த. அறவாழி தலைமை வகித்தாா். முன்னாள் பேராசிரியா் சி. சியாமளா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மகளிரின் சிறப்பு குறித்தும், சேவை மனப்பான்மையை வளா்த்துக் கொள்வது குறித்தும் பேசினாா்.

பேராசிரியா்கள் சிவயோகம், சித்ரலேகா, மலா்விழி, இளவரசி, திருஞானசம்பந்தம், ராஜேஷ், ராமு ஆகியோா் தங்களது குழுக்களின் அறிக்கையை சமா்ப்பித்தனா். சிறப்பாக சேவை ஆற்றிய மாணவிகளுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. நிறைவாக, நாட்டுநலப்பணித்திட்ட மாணவச் செயலா் ஜெயபாரதி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.