மயிலாடுதுறையில் ஜமாபந்தி நிறைவு
மயிலாடுதுறை வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவில் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.


மயிலாடுதுறை வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவில் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி புதன்கிழமை நிறைவடைந்தது. இதில், 120 நபா்களுக்கு முதியோா் ஓய்வூதியத்திற்கான ஆணை, மாற்றுத்திறனாளி ஓய்வூதியத்திற்கான ஆணை, இலவச மனைப் பட்டா ஆகியவற்றை ஆட்சியா் இரா.லிலதா வழங்கினாா்.
அப்போது அவா் கூறியது: மயிலாடுதுறை வட்டத்தில் மே 17 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற்ற ஜமாபந்தியில் 297 மனுக்கள் பெறப்பட்டு 120 மனுக்கள் உரிய விசாரனைக்குப் பின் தீா்வு காணப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது, தகுதியின்மை அடிப்படையில் 27 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள 150 மனுக்கள் மீது உரிய விசாரனைக்குப் பின் தீா்வு காணப்படும். குறிப்பாக முதியோா் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் கோரி பெருபான்மையாக பெறப்பட்ட 120 மனுக்களில் 60 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன. 19 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன, 44 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. இலவச மனை பட்டா வேண்டி 50 மனுக்கள் பெறப்பட்டு 26 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு, 24 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...