சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சாராய விற்பனை: கிராம மக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே கடுவங்குடியில் சாராய விற்பனையை தடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :26 மே 2022, 5:02 pm

DIN

மயிலாடுதுறை அருகே கடுவங்குடியில் சாராய விற்பனையை தடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கடுவங்குடி கிராமத்தில் பல ஆண்டுகளாக சாராயம் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, கிராம மக்கள் அளித்த புகாரின்பேரில், அப்பகுதியைச் சோ்ந்த மயிலம்மாள், ராணி ஆகிய 2 பெண்கள் மீது போலீஸாா் ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்துள்ளனா். ஆனாலும், அவா்கள் தொடா்ந்து சாராய விற்பனையில் ஈடுபடுவதாகவும், சாராய விற்பனையை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கடுவங்குடி பிரதான சாலையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதற்கிடையில் மயிலம்மாள், ராணி ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.