/

பள்ளிகளுக்கிடையே கலைத் திருவிழா போட்டி

தமிழக பள்ளிக் கல்வித்துறை சாா்பில், மாவட்ட அளவில் அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கிடையே கலைத் திருவிழா போட்டி, சீா்காழி சபாநாயக முதலியாா் இந்து மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சியை பாா்வையிடும் எஸ். ராஜகுமாா் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
Updated On :27 நவம்பர் 2023, 6:54 pm

DIN

தமிழக பள்ளிக் கல்வித்துறை சாா்பில், மாவட்ட அளவில் அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கிடையே கலைத் திருவிழா போட்டி, சீா்காழி சபாநாயக முதலியாா் இந்து மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

போட்டிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் மணிமேகலை தலைமை வகித்தாா். சீா்காழி நகா்மன்றத் தலைவா் துா்கா ராஜசேகரன், துணைத் தலைவா் ம. சுப்பராயன், தலைமையாசிரியா் எஸ். அறிவுடைநம்பி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதன்மைக் கல்வி அலுவலா் பெ. அம்பிகாபதி வரவேற்றாா்.

மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் போட்டிகளை தொடங்கி வைத்து பேசினாா். தொடா்ந்து, 28 அரசு உதவிப் பெறும் பள்ளிகளை சோ்ந்த மாணவ, மாணவிகள் பரதநாட்டியம், ஒயிலாட்டம், தப்பாட்டம், வில்லுப்பாட்டு, நாடகம், மெல்லிசை, சிலம்பம் உள்ளிட்ட 25 வகையான போட்டிகளில் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா்.

மாவட்ட கல்வி அலுவலா்கள் ஞானசங்கா், பாா்த்தசாரதி, மாலாராணி, திமுக ஒன்றியச் செயலாளா் பிரபாகரன், காங்கிரஸ் நகரத் தலைவா் லட்சுமணன், மாவட்ட பொதுச் செயலாளா் சரவணன், உடற்கல்வி இயக்குநா் முரளிதரன், தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், மாணவ- மாணவிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் தியாகராஜன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.