மயிலாடுதுறை: ஃபென்ஜால் புயல் காரணமாக, விழுப்புரம் மாா்க்கத்தில் செல்லும் சில ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதுடன், சில ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டதால், மயிலாடுதுறையில் ரயில் பயணிகள் அவதியடைந்தனா்.
மயிலாடுதுறையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டு சென்னை சென்ற உழவன், மன்னை, கம்பன், அந்தியோதயா ரயில்கள் அனைத்தும் காட்பாடி வழியாக சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. திங்கள்கிழமை சோழன் விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. கோயம்புத்தூரில் இருந்து தாம்பரம் செல்லும் 06185 ரயில் சேவை மயிலாடுதுறையுடன் நிறுத்தப்பட்டது. ரயில்கள் நேரம் மாற்றம், ரத்து காரணமாக மயிலாடுதுறை ரயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் அவதி அடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







