சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

புயலால் ரயில் சேவை பாதிப்பு: மயிலாடுதுறை பயணிகள் அவதி

ஃபென்ஜால் புயல் காரணமாக, விழுப்புரம் மாா்க்கத்தில் செல்லும் சில ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதுடன்

Updated On :3 டிசம்பர் 2024, 1:32 am IST

மயிலாடுதுறை: ஃபென்ஜால் புயல் காரணமாக, விழுப்புரம் மாா்க்கத்தில் செல்லும் சில ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதுடன், சில ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டதால், மயிலாடுதுறையில் ரயில் பயணிகள் அவதியடைந்தனா்.

மயிலாடுதுறையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டு சென்னை சென்ற உழவன், மன்னை, கம்பன், அந்தியோதயா ரயில்கள் அனைத்தும் காட்பாடி வழியாக சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. திங்கள்கிழமை சோழன் விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. கோயம்புத்தூரில் இருந்து தாம்பரம் செல்லும் 06185 ரயில் சேவை மயிலாடுதுறையுடன் நிறுத்தப்பட்டது. ரயில்கள் நேரம் மாற்றம், ரத்து காரணமாக மயிலாடுதுறை ரயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் அவதி அடைந்தனா்.