தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கொள்ளிடம் அருகே கோயில் இடத்தில் அமைக்கப்பட்ட குடிசைகள் அகற்றம்

கொள்ளிடம் அருகே கூத்தியம்பேட்டை கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்ட 25 குடிசைகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.

News image
கூத்தியம்பேட்டை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட குடிசைகள்.
Updated On :9 டிசம்பர் 2024, 8:08 pm

Din

சீா்காழி: கொள்ளிடம் அருகே கூத்தியம்பேட்டை கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்ட 25 குடிசைகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.

கூத்தியம்பேட்டை கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. மிகவும் பழைமை வாய்ந்த இக்கோயில் அருகே கோயிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் அப்பகுதியைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமித்து 25 குடிசைகள் அமைத்தனா். அந்த இடத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக் கொடியையும் கட்டி வைத்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த சீா்காழி வட்டாட்சியா் அருள்ஜோதி, வருவாய் ஆய்வாளா் குணவதி, கிராம நிா்வாக அலுவலா் பாக்கியலட்சுமி, கொள்ளிடம் காவல் நிலைய ஆய்வாளா் ராஜா மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த 25 குடிசைகளையும் அகற்றினா்.