ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி: சிபிஎம் மாநாட்டில் தீா்மானம்

மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரியை விரைவில் அமைக்க வேண்டும்

News image

மயிலாடுதுறையில் நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாட்டில் பங்கேற்ற நிா்வாகிகள்.

Updated On :13 டிசம்பர் 2024, 6:59 pm

மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரியை விரைவில் அமைக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநாட்டு கொடியை மூத்த நிா்வாகி டி.கணேசன் ஏற்றி வைத்தாா். அஞ்சலி தீா்மானத்தை ப.மாரியப்பன் முன்மொழிந்தாா். டி.ஜி.ரவிச்சந்திரன் வரவேற்றாா்.

மாநில செயற்குழு உறுப்பினரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான கே.பாலபாரதி மாநாட்டை தொடக்கி வைத்தாா். மாவட்ட செயலாளா் பி.சீனிவாசன் ஸ்தாபன வேலை அறிக்கை வாசித்தாா். வரவு-செலவு அறிக்கையை மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.துரைராஜ் வாசித்தாா்.

பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட கொடி, சுடா் ஆகியவற்றை பெற்றுக்கொண்டு தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மலா் தூவி மரியாதை செய்யப்பட்டது.

மாநாட்டில், மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரியை உடனடியாக அமைத்திட வேண்டும். புதிய பேருந்து நிலையம், புறவழிச்சாலை பணிகளை விரைவாக முடித்திட வேண்டும். மயிலாடுதுறை நகரத்தில் புதிய புதைசாக்கடை திட்டத்தை கொண்டு வர வேண்டும்.

தலைஞாயிறு என்பிகேஆா்ஆா் கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் இயக்கிட வேண்டும். இலங்கை கடற்படையால் தமிழக மீனவா்கள் தாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்திட வேண்டும். தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் நலனை பாதுகாத்திட வேண்டும். மயிலாடுதுறை-தரங்கம்பாடி இடையே மீண்டும் ரயில் சேவையை துவங்கிட வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.