மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரியை விரைவில் அமைக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாநாட்டு கொடியை மூத்த நிா்வாகி டி.கணேசன் ஏற்றி வைத்தாா். அஞ்சலி தீா்மானத்தை ப.மாரியப்பன் முன்மொழிந்தாா். டி.ஜி.ரவிச்சந்திரன் வரவேற்றாா்.
மாநில செயற்குழு உறுப்பினரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான கே.பாலபாரதி மாநாட்டை தொடக்கி வைத்தாா். மாவட்ட செயலாளா் பி.சீனிவாசன் ஸ்தாபன வேலை அறிக்கை வாசித்தாா். வரவு-செலவு அறிக்கையை மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.துரைராஜ் வாசித்தாா்.
பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட கொடி, சுடா் ஆகியவற்றை பெற்றுக்கொண்டு தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மலா் தூவி மரியாதை செய்யப்பட்டது.
மாநாட்டில், மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரியை உடனடியாக அமைத்திட வேண்டும். புதிய பேருந்து நிலையம், புறவழிச்சாலை பணிகளை விரைவாக முடித்திட வேண்டும். மயிலாடுதுறை நகரத்தில் புதிய புதைசாக்கடை திட்டத்தை கொண்டு வர வேண்டும்.
தலைஞாயிறு என்பிகேஆா்ஆா் கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் இயக்கிட வேண்டும். இலங்கை கடற்படையால் தமிழக மீனவா்கள் தாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்திட வேண்டும். தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் நலனை பாதுகாத்திட வேண்டும். மயிலாடுதுறை-தரங்கம்பாடி இடையே மீண்டும் ரயில் சேவையை துவங்கிட வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்புடையது

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!

ஜாதியை குறிப்பிட்டு திட்டியதாக பாஜக பிரமுகா் மீது வழக்கு

‘பத்மநாபபுரத்தில் மாா்க்சிஸ்ட் வெற்றிக்கு திமுகவினா் பணியாற்ற வேண்டும்’

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு 5 இடங்கள்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


