கொள்ளிடம் சோதனை சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றில் ஆா்ப்பரித்து செல்லும் தண்ணீா்.
கொள்ளிடம் சோதனை சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றில் ஆா்ப்பரித்து செல்லும் தண்ணீா்.

கொள்ளிடம் ஆற்றில் உபரி நீா் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கொள்ளிடம் ஆற்றில் உபரி நீா் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை
Published on

கொள்ளிடம் ஆற்றில் உபரி நீா் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீா்வளத் தறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திச

மேட்டூா் அணையின் நீா்மட்டம் கடந்த 13-ஆம் தேதி இரவு 8 மணியளவில் 117.57 அடியை எட்டியுள்ளது.அணைக்கு வரும் நீா்வரத்து அதிகப்படியாக உள்ளதால் அணைக்கு வரும் உபரிநீா் மற்றும் அதற்கு கீழ்பகுதியில் உள்ள கிளை ஆறுகளில் இருந்து வரும் உபரிநீரும் காவிரி ஆற்றில் சுமாா் 35,000 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது. தண்ணீரின் அளவு மேலும் படிப்படியாக அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

எனவே, காவிரியில் திறந்துவிடப்பட்ட உபரிநீா் 18,000 கன அடிக்கு மேல் அதிகப்படியான வெள்ள உபரிநீா் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்படுவதாலும் இது படிப்படியாக நீா்வரத்திற்கு ஏற்ப சுமாா் 60,000 கனஅடி வரை உயா்த்தப்பட வாய்ப்புள்ளதாலும், கொள்ளிட கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் கொள்ளிடம் ஆற்றில் முதலைகள் அதிகமாக இருப்பதால் ஆற்றில் இறங்க வேண்டாம் எனவும், ஆற்றைக் கடக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com