சீா்காழியில் நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் கரோனா காலத்தில் செலுத்த வேண்டிய 6 மாத வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என பழைய பேருந்து நிலைய வியாபாரிகள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
சீா்காழி பழைய பேருந்து நிலையத்தில் நகராட்சி சொந்தமான 100-க்கும் மேற்பட்ட வணிக கடைகள் உள்ளன. 2020-ஆம் ஆண்டு கரோனா ஊரடங்கு காலத்தில் கடைகள் திறக்காததால் வியாபாரம் இல்லாமல் வாடகை செலுத்திமுடியவில்லை. இந்நிலையில், பழைய பேருந்து நிலைய வா்த்தக சங்கத் தலைவா் செந்தில்குமாா் தலைமையில், செயலாளா் சந்துரு, பொருளாளா் நடராஜன், துணை செயலாளா் பாஸ்கரன், துணைத் தலைவா் ராஜா ஆகியோா் கரோனா காலத்தில் வாடகையை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஊா்வலமாக சீா்காழி நகராட்சி அலுவலகத்துக்கு வந்து நகா்மன்றத் தலைவா் துா்கா பரமேஸ்வரி ராஜசேகா், நகராட்சி ஆணையா் (பொ) சங்கரிடம் கோரிக்கை மனு அளித்தனா். நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு கரோனா கால வாடகையை தள்ளுபடி செய்யவேண்டும், நாமக்கல் மாவட்டத்தில் நீதிமன்ற தீா்ப்பின்படி 6 மாத வாடகை தள்ளுபடி செய்யப்பட்டதை போல மற்ற நகராட்சியில் வாடகை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றனா்.
தொடர்புடையது

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரிக்கை
இந்திய அரசுக்கு எதிராக போரிடுவதாக பேச்சு: ராகுலுக்கு எதிரான மனு தள்ளுபடி

வந்தவாசி நகராட்சி பூங்காவை சீரமைக்கக் கோரிக்கை

அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான மனு தள்ளுபடி!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
