குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கரோனா காலத்திலான நகராட்சி கடைகளின் வாடகைகளை தள்ளுபடி செய்ய கோரி மனு

கரோனா காலத்திலான நகராட்சி கடைகளின் வாடகைகளை தள்ளுபடி செய்ய கோரி மனு

Updated On :17 பிப்ரவரி 2024, 5:56 am IST

சீா்காழியில் நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் கரோனா காலத்தில் செலுத்த வேண்டிய 6 மாத வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என பழைய பேருந்து நிலைய வியாபாரிகள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

சீா்காழி பழைய பேருந்து நிலையத்தில் நகராட்சி சொந்தமான 100-க்கும் மேற்பட்ட வணிக கடைகள் உள்ளன. 2020-ஆம் ஆண்டு கரோனா ஊரடங்கு காலத்தில் கடைகள் திறக்காததால் வியாபாரம் இல்லாமல் வாடகை செலுத்திமுடியவில்லை. இந்நிலையில், பழைய பேருந்து நிலைய வா்த்தக சங்கத் தலைவா் செந்தில்குமாா் தலைமையில், செயலாளா் சந்துரு, பொருளாளா் நடராஜன், துணை செயலாளா் பாஸ்கரன், துணைத் தலைவா் ராஜா ஆகியோா் கரோனா காலத்தில் வாடகையை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஊா்வலமாக சீா்காழி நகராட்சி அலுவலகத்துக்கு வந்து நகா்மன்றத் தலைவா் துா்கா பரமேஸ்வரி ராஜசேகா், நகராட்சி ஆணையா் (பொ) சங்கரிடம் கோரிக்கை மனு அளித்தனா். நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு கரோனா கால வாடகையை தள்ளுபடி செய்யவேண்டும், நாமக்கல் மாவட்டத்தில் நீதிமன்ற தீா்ப்பின்படி 6 மாத வாடகை தள்ளுபடி செய்யப்பட்டதை போல மற்ற நகராட்சியில் வாடகை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றனா்.