மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 13 மழைமானிகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 13 மழைமானிகள்

Updated On :17 பிப்ரவரி 2024, 6:05 am IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 13 தானியங்கி மழைமானிகள், 2 தானியங்கி வானிலை நிலையங்கள் நிறுவப்படவுள்ளன என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் புதிதாக 13 தானியங்கி மழைமானிகள் மற்றும் 2 தானியங்கி வானிலை நிலையங்கள் நிறுவ இடங்கள் தோ்வு செய்யப்பட்டு, நிறுவுதல் மற்றும் செயல்படுத்துதல் பணிகள் பிப்ரவரி இறுதிக்குள் தொடங்கப்படும். மழைமானிகள் மயிலாடுதுறை நகரம் (பொதுப்பணித்துறை அலுவலகம்), திருவாளப்புத்தூா் (வருவாய் ஆய்வாளா் அலுவலகம்) மணல்மேடு (பொதுப்பணித் துறை அலுவலகம்), குத்தாலம் வட்டத்தில் மங்கநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பாலையூா் கிராமத்தில் அமைக்கப்பட உள்ளது.

சீா்காழி வட்டத்தில் சீா்காழி வருவாய் ஆய்வாளா் அலுவலகம், திருவெண்காடு கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், மாதானம் வருவாய் ஆய்வாளா் அலுவலகம், மகேந்திரப்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் தரங்கம்பாடி வட்டத்தில் மருதம்பள்ளம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், செம்பனாா்கோவில் இ-சேவை மையம் அலுவலகம், தரங்கம்பாடி வட்ட அலுவலகம்,நெடுவாசல் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் ஆகிய 13 இடங்களில் மழைமானிகள் அமைக்கப்பட உள்ளன. தானியங்கி வானிலை நிலையங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் செம்பனாா்கோவில் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அமைக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளாா்.