விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :23 ஜூலை 2024, 6:31 pm

Din

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை மன்னம்பந்தலில் இயங்கிவரும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்துள்ளது.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் சுப்ரியா தலைமையில் ஆட்சியா் அலுவலகத்துக்கு சென்ற போலீஸாா் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் சோதனை நடத்தினா். இதில், வெடிகுண்டு எதுவும் சிக்காததால் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடா்ந்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், மிரட்டல் விடுத்தது மயிலாடுதுறை நல்லத்துக்குடியை சோ்ந்த கணேசன் என்பது தெரியவந்தது. போலீஸாா் அவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.