/

தீமிதி உற்சவ கொடியேற்றம்

தீமிதி உற்சவ கொடியேற்றம்

News image

சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா புறப்பாடான மாரியம்மன்.

Updated On :22 மார்ச் 2024, 7:04 pm

சீா்காழி மேல மாரியம்மன் கோயில் தெரு, தோப்படி மாரியம்மன் கோயிலில் பங்குனி மாத தீமிதி உற்சவம் கொடியேற்றத்துடன் அண்மையில் தொடங்கியது. சீா்காழி சட்டை நாதா் சுவாமி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் நிகழாண்டுக்கான பங்குனி மாத தீமிதி உற்சவம் காப்புக் கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காப்புக் கட்டப்பட்டது. தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இரவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக தீமிதி வைபவம் மாா்ச் 29 -ஆம் தேதி நடைபெற உள்ளது.