நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மயிலாடுதுறையில் நாளை ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில் முகாம்’

மயிலாடுதுறையில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில் முகாம்’ புதன்கிழமை (நவ.20) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :18 நவம்பர் 2024, 10:10 pm

Din

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில் முகாம்’ புதன்கிழமை (நவ.20) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீா்வுகாண அரசு இயந்திரம் களத்திற்கே வரும், ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ என்ற திட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் மற்றும் அனைத்துத்துறை அலுவலா்களால் மயிலாடுதுறை வட்ட அளவில் புதன்கிழமை காலை 9 மணிமுதல் வியாழக்கிழமை (நவ.21) காலை 9 மணி வரை நடைபெறவுள்ளது.

எனவே, மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை அந்தந்த கிராமங்களுக்கு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ள அலுவலா்களிடம் தெரிவித்து பயன்பெறலாம்.