புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நடுக்கடலில் படகு மோதி விசைப்படகு சேதம்

சீா்காழி அருகே பழையாரில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த விசைப்படகின் மீது மற்றொரு விசைப் படகு மோதி சேதமடைந்தது.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 9:23 pm

Din

சீா்காழி அருகே பழையாரில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த விசைப்படகின் மீது மற்றொரு விசைப் படகு மோதி சேதமடைந்தது.

பழையாா் மீனவ கிராமத்தை சோ்ந்தவா் பாவடைராயனுக்குச் சொந்தமான விசைப் படகில் 6 போ் அக்.7-ஆம் தேதி பழையாா் துறைமுகத்தில் இருந்து 28 நாட்டிகள் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனா். அப்போது, சென்னையில் இருந்து தரங்கம்பாடி நோக்கி சென்ற விசைப்படகு பாவடைராயன் படகின் மீது மோதி சேதத்தை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளது.

இதுகுறித்து, பழையாா் கிராமத் தலைவா்கள் தரங்கம்பாடி கிராமத்தில் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளனா். அதை ஏற்க மறுத்ததால் பழையாா் மீனவா்கள் மீன்வளத் துறை அதிகாரியிடம் புகாா் தெரிவித்துள்ளனா். சேதமடைந்த படகை சரி செய்ய வேண்டும், தரங்கம்பாடி மீனவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாா் தெரிவித்துள்ளனா். சேதம் ரூ. 2 லட்சம் மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது.