நடுக்கடலில் படகு மோதி விசைப்படகு சேதம்
சீா்காழி அருகே பழையாரில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த விசைப்படகின் மீது மற்றொரு விசைப் படகு மோதி சேதமடைந்தது.


சீா்காழி அருகே பழையாரில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த விசைப்படகின் மீது மற்றொரு விசைப் படகு மோதி சேதமடைந்தது.
பழையாா் மீனவ கிராமத்தை சோ்ந்தவா் பாவடைராயனுக்குச் சொந்தமான விசைப் படகில் 6 போ் அக்.7-ஆம் தேதி பழையாா் துறைமுகத்தில் இருந்து 28 நாட்டிகள் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனா். அப்போது, சென்னையில் இருந்து தரங்கம்பாடி நோக்கி சென்ற விசைப்படகு பாவடைராயன் படகின் மீது மோதி சேதத்தை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளது.
இதுகுறித்து, பழையாா் கிராமத் தலைவா்கள் தரங்கம்பாடி கிராமத்தில் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளனா். அதை ஏற்க மறுத்ததால் பழையாா் மீனவா்கள் மீன்வளத் துறை அதிகாரியிடம் புகாா் தெரிவித்துள்ளனா். சேதமடைந்த படகை சரி செய்ய வேண்டும், தரங்கம்பாடி மீனவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாா் தெரிவித்துள்ளனா். சேதம் ரூ. 2 லட்சம் மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...