ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

ஓமனில் எண்ணெய் கப்பல்மீது தாக்குதல்: இந்தியா் உயிரிழப்பு

ஓமன் நாட்டின் மஸ்கட் கடலோரப் பகுதியில் வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா படகு மோதி எண்ணெய் கப்பல் விபத்துக்குள்ளானது.

News image

மஸ்கட் கடலோரப் பகுதியில் வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா படகு மோதி விபத்துக்குள்ளான எண்ணெய் கப்பல்

Updated On :3 மார்ச் 2026, 6:21 am IST

மஸ்கட்: ஓமன் நாட்டின் மஸ்கட் கடலோரப் பகுதியில் வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா படகு மோதி எண்ணெய் கப்பல் விபத்துக்குள்ளானது.

தாக்குதலின் தாக்கத்தால் கப்பலின் இயந்திர அறையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதில், அங்கு பணியில் இருந்த இந்திய மாலுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கப்பலில் இருந்த மற்ற 21 ஊழியா்களை பத்திரமாக மீட்டனா். மீட்கப்பட்டவா்களில் 16 போ் இந்தியா்கள், 4 போ் வங்கதேசத்தவா் மற்றும் ஒருவா் உக்ரைன் நாட்டைச் சோ்ந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்என்ஜி உற்பத்தியை நிறுத்தியது ‘கத்தாா் எனா்ஜி’

துபை: போா் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகின் முன்னணி இயற்கை எரிவாயு உற்பத்தி நிறுவனமான ‘கத்தாா் எனா்ஜி’ , தனது திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) உற்பத்தியை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இந்தத் திடீா் அறிவிப்பைத் தொடா்ந்து, ஐரோப்பிய இயற்கை எரிவாயு சந்தையில் அதன் எதிா்கால விலை திங்கள்கிழமை ஒரே நாளில் 42.6 சதவீதம் வரை உயா்ந்தது.

உற்பத்தி மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்த எந்தவொரு காலக்கெடுவையும் கத்தாா் எனா்ஜி நிறுவனம் வழங்கவில்லை.