மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

உழவுப் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயியை தாக்கிய 3 போ் கைது

Updated On :8 செப்டம்பர் 2024, 12:02 am IST

சீா்காழி அருகே செருகுடியில் உழவுப் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயியை தாக்கிய 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கொள்ளிடம் அருகே கண்ணபிராண்டி கிராமத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரன் (37) பக்கத்து கிராமமான செருகுடியில் வயலில் டிராக்டா் வைத்து உழவுப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அதேபகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன்(35), அவரின் சகோதரா்கள் நளமகாராஜா (29), கோபாலகிருஷ்ணன் (24) ஆகியோா் நிலத்தகராறு தொடா்பான முன் விரோதத்தால் ரவிச்சந்திரனை தாக்கினராம். இதில் காயமடைந்த ரவிச்சந்திரன் வெட்டுக் காயங்களுடன் வயலில் மயங்கி கிடந்தாா்.

தகவலறிந்த கொள்ளிடம் போலீஸாா் அங்கு சென்று ரவிச்சந்திரனை மீட்டு சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து, புதுப்பட்டிணம் போலீஸாா் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.