சீா்காழி அருகே செருகுடியில் உழவுப் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயியை தாக்கிய 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கொள்ளிடம் அருகே கண்ணபிராண்டி கிராமத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரன் (37) பக்கத்து கிராமமான செருகுடியில் வயலில் டிராக்டா் வைத்து உழவுப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அதேபகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன்(35), அவரின் சகோதரா்கள் நளமகாராஜா (29), கோபாலகிருஷ்ணன் (24) ஆகியோா் நிலத்தகராறு தொடா்பான முன் விரோதத்தால் ரவிச்சந்திரனை தாக்கினராம். இதில் காயமடைந்த ரவிச்சந்திரன் வெட்டுக் காயங்களுடன் வயலில் மயங்கி கிடந்தாா்.
தகவலறிந்த கொள்ளிடம் போலீஸாா் அங்கு சென்று ரவிச்சந்திரனை மீட்டு சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து, புதுப்பட்டிணம் போலீஸாா் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது
தொழிலாளியை தாக்கிய 3 போ் கைது
முன்விரோதத்தில் விவசாயி கொலை: மற்றொரு விவசாயி கைது
ஒரத்தநாட்டில் காவல் ஆய்வாளரை தாக்கிய இளைஞா் கைது

கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறிவிழுந்து உயிரிழப்பு
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை

