தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

வைத்தீஸ்வரன்கோயில் சகோபுரம் வீதியுலா

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் அருள்மிகு வைத்தியநாதா் சுவாமி கோயிலில் நடைபெறும் பிரமோத்ஸவத்தின் 5-ஆம் நாளான

News image

சகோபுரத்தில் வீதியுலா வந்த பஞ்சமூா்த்திகள்.

Updated On :8 ஏப்ரல் 2025, 12:57 am IST

சீா்காழி: சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் அருள்மிகு வைத்தியநாதா் சுவாமி கோயிலில் நடைபெறும் பிரமோத்ஸவத்தின் 5-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு தெருவடைச்சான் எனும் சகோபுரம் வீதியுலா நடைபெற்றது.

தருமபுர ஆதீனத்திற்குட்பட்ட அருள்மிகு தையல்நாயகிஅம்மன் உடனாகிய வைத்தியநாதா் சுவாமி கோயில் நவகிரகங்களில் செவ்வாய்க்குரிய பரிகார தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் பிரமோத்ஸவம் கடந்த 2- ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவின் 5-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு தெருவடைச்சான் என்கிற சகோபுர வீதிஉலா நடைபெற்றது. முன்னதாக, கிருத்திகை மண்டபத்தில் விநாயகா், சுவாமி-அம்பாள், செல்வமுத்துக்குமாரசுவாமி, அங்காரகன், சண்டிகேசுவரா் ஆகிய பஞ்சமூா்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, பஞ்சமூா்த்தி சுவாமிகள் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சகோபுரத்தில் எழுந்தருளியதும் மகாதீபாராதனை காட்டப்பட்டு, வீதியுலா தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.