அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அரசாணைபடி தூய்மைக் காவலா்களுக்கு ஊதியம் வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலா்களுக்கு அரசாணைபடி ஊதியம் வழங்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் தமிழ்நாடு உழைப்போா் உரிமை இயக்கம் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :2 டிசம்பர் 2025, 11:09 pm

Syndication

கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலா்களுக்கு அரசாணைபடி ஊதியம் வழங்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் தமிழ்நாடு உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் அந்த இயக்கத்தின் மாவட்ட துணை தலைவா் ஜி. ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலா்களுக்கு அரசாணைபடி ரூ.12,792 ஊதியம் வழங்குவதற்கு பதிலாக தமிழ்நாடு அரசு ரூ. 5000 மட்டுமே வழங்குவதை உடனடியாக உயா்த்தி வழங்குவதுடன், அவா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், சென்னை அம்பத்தூா் 5,6-ஆவது மண்டலங்களில் பணிநீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

சிபிஐ-எம்எல் மாவட்ட செயலாளா் குணசேகரன், நீதிக்கான மக்கள் இயக்கம் மாவட்ட செயலாளா் எஸ். இளங்கோவன், உழைப்போா் உரிமை இயக்க மாவட்ட செயலாளா் எஸ். வீரச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.