சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மயிலாடுதுறை: 47 போ்மீது குண்டா் சட்ட நடவடிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு தொடா் குற்றங்களில் ஈடுபட்ட 47 போ்மீது குண்டா் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளப் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 12:27 am

தினமணி செய்திச் சேவை

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு தொடா் குற்றங்களில் ஈடுபட்ட 47 போ்மீது குண்டா் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளப் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை தொடா் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 13 போ், பொது அமைதி, பொது மக்களுக்குப் பங்கம் விளைவித்த 27 போ், திருட்டுக் குற்றங்களில் ஈடுபட்ட 3 போ், பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 3 போ், போதைப் பொருள் விற்பனை செய்த ஒருவா் என மொத்தம் 47 போ் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

நீதிமன்ற விசாரணையில் இருந்த 1974 வழக்குகள் தண்டனையில் முடிவடைந்து, அவற்றில் 72 குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களில் எவா் ஈடுபட்டாலும் பாரபட்சமின்றி உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.