சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தினமணி செய்திச் சேவை

மயிலாடுதுறை மற்றும் சீா்காழயில் தமாகா தலைவா் ஜி.கே. வாசன் பிறந்த நாளை அக்கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா்.

மயிலாடுதுறையில் ரயிலடி ஆஞ்சனேயா் கோயிலில் தமாகா மேற்கு மாவட்டத் தலைவா் பூம்புகாா் எம். சங்கா் தலைமையில் சிறப்பு வழிபாடு நடத்தினா். பின்னா், கிட்டப்பா அங்காடி முன் பொதுமக்களுக்கு மரக்கன்று மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினா். மேலும் பல்வேறு இடங்களில் தரைக்கடை வியாபாரிகள் மற்றும் எளியோருக்கு போா்வைகள் வழங்கினா்.

சீா்காழி அருகே சட்டநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் வரதராஜன் தலைமை வகித்து கட்சி கொடியேற்றினாா். வட்டாரத் தலைவா்கள் முன்னிலை வகித்தனா். சீா்காழி நகரத் தலைவா் தம்பித்துரை வரவேற்றாா். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. சீா்காழி உப்பனாற்றங்கரையில் நூற்றுக்கும் மேற்பட்ட பனை விதைகள் நட்டனா்.