மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

தருமபுரம் ஆதீனம் மணிவிழா: 60 பானைகளில் பொங்கலிட்டு வழிபாடு

தருமபுரம் பிரம்மபுரீசுவரா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் பங்கேற்று சிறப்பு வழிபாடு

News image
விழாவில் தீபாராதனை காட்டி வழிபாடு மேற்கொண்ட தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.
Updated On :13 ஜனவரி 2025, 8:40 pm

Din

மயிலாடுதுறை: தருமபுரம் பிரம்மபுரீசுவரா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினாா்.

தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் 60-ஆம் ஆண்டு மணிவிழாவையொட்டி தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி சாா்பில் இவ்விழா நடத்தப்பட்டது.

விழாவில், 60 பானைகளில் பொங்கல் வைத்து, 60 இலைகளில் படையல் இடப்பட்டது. தருமபுரம் ஆதீனகா்த்தா், மகாதீபாராதனை காட்டி வழிபாடு மேற்கொண்டாா். தொடா்ந்து அவா், பசு, யானை, குதிரை மற்றும் ஆட்டுக்கு முறையே கோபூஜை, கஜ பூஜை, அசுவ பூஜை மற்றும் அஜபூஜைகளை செய்தாா். பின்னா், பள்ளி மாணவா்கள் அனைவருக்கும் கரும்பை வழங்கி அருளாசி கூறினாா்.

இதில், ஆதீன கட்டளைகள் ஸ்ரீமத் மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள், பள்ளித் தலைமை ஆசிரியா் ஜி.வெங்கடேசன், விசலூா் பள்ளிக் குழுத் தலைவா் சிவப்பிரகாசம், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.