பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தீப்பாய்ந்தாள் அம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா

மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் தீமிதித் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 மார்ச் 2025, 8:16 pm

Din

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் தீமிதித் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை காவிரிக் கரையில் கணவனுடன் உடன்கட்டை ஏறிய பெண்ணை தெய்வமாக உருவகித்து தீப்பாய்ந்தாள் அம்மன் என்ற பெயரில் கோயிலில் சிலை அமைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனா். இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தீமிதி திருவிழா நடைபெறும். அவ்வகையில், 133-ஆவது ஆண்டாக நடைபெற்ற தீமிதி திருவிழாவையொட்டி, விரதமிருந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் காவிரி ஆற்றங்கரை நாலுகால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, கோயிலை அடைந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் தீமிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்தனா்.