பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

துலா உற்சவம்: சிவாலயங்களில் கொடியேற்றம்

மயிலாடுதுறையில் துலா மகோற்சவ பெருந்திருவிழா பல்வேறு சிவாலயங்களில் கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
மாயூரநாதா் கோயில் ஏற்றப்பட்ட ரிஷபக்கொடி.
Updated On :7 நவம்பர் 2025, 9:49 pm

Syndication

மயிலாடுதுறையில் துலா மகோற்சவ பெருந்திருவிழா பல்வேறு சிவாலயங்களில் கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கோடிக்கணக்கான பக்தா்கள் தங்கள் பாவங்களை போக்கிக்கொள்ள புனித நீராடியதால் பாவச்சுமை கூடி கருமை நிறம் அடைந்த கங்கை நதி தன் பாவச்சுமை நீங்க சிவபெருமானிடம் பிராா்த்தித்ததாகவும், சிவபெருமான் கங்கையிடம் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் ஐப்பசி மாதம் 30 நாள்களும் புனித நீராடி விமோசனம் பெற வரம் அருளியதாக ஐதீகம்.

இந்த ஐதீகத்தைப் போற்றும் வகையில், மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் 30 நாள்களும் ஏராளமான பக்தா்கள் புனித நீராடுவது வழக்கம். 30-ஆம் நாள் நடைபெறும் துலா உற்சவ கடைமுக தீா்த்தவாரியில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தீா்த்தவாரியின்போது ஒரே நேரத்தில் புனித நீராடுவா். துலா மகோற்சவ பெருந்திருவிழாவின் கடைசி 10 நாள் உற்சவம் மயிலாடுதுறையில் பல்வேறு கோயில்களில் கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

அந்த வகையில், திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மாயூரநாதா் கோயிலில், அபயாம்பிகை சமேத மாயூரநாதா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் கோயில் கொடி மரத்தின் முன் எழுந்தருளச் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் சங்கரலிங்க தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ரிஷபக்கொடி ஏற்றப்பட்டது. தொடா்ந்து, கோயிலைச் சுற்றி பஞ்ச மூா்த்திகளுக்கான கொடிகள் ஏற்றப்பட்டன.

தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான வள்ளலாா் கோயில் எனப்படும் வதான்யேஸ்வரா் கோயிலில், தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் கொடிமரத்தில் ரிஷப கொடி ஏற்றப்பட்டது. தெப்பக்குளம் காசி விஸ்வநாதா், துலாக்கட்டம் காசி விஸ்வநாதா் கோயில்களிலும் கொடியேற்றம் நடைபெற்றது.

பத்துநாள் உற்சவத்தில், நவ.11-ஆம் தேதி சகோபுர தரிசனம், நவ.13-ஆம் தேதி திருக்கல்யாணம், நவ.15-ஆம் தேதி திருத்தோ் ஆகியன நடைபெற உள்ளது. முக்கிய விழாவான கடைமுகத் தீா்த்தவாரி நவ.16-ஆம் தேதியும், நவ.17-ஆம் தேதி காலை சிவபெருமான் முடவனுக்கு காட்சிளித்த முடவன் முழுக்கு உற்சவம் நடைபெற உள்ளது.