அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மாயூரநாதா் கோயிலில் மயிலம்மன் பூஜை

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில், துலா உற்சவத்தையொட்டி, மயிலம்மன் பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 நவம்பர் 2025, 8:59 pm

தினமணி செய்திச் சேவை

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில், துலா உற்சவத்தையொட்டி, மயிலம்மன் பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இறைவனை பிரிந்த பாா்வதிதேவி, இக்கோயிலில் மயில் வடிவம் கொண்டு தவம் செய்து பூஜித்து மீண்டும் இறைவனை சோ்ந்ததாக ஐதீகம். இதனால், இவ்வூருக்கு மயில் ஆடும் துறை என பெயா் வரப்பெற்றது.

இக்கோயிலில், ஐப்பசி மாத துலா உற்சவம் நவ.7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் 5-ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை மயிலம்மன் பூஜை நடைபெற்றது.

விழாவில், மாயூரநாதா் சந்நிதியில், அபயாம்பிகை அம்மன் மயில் உருவில் சிவனை பூஜிக்கும் ஐதீக நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமியும், அம்பாளும் மயூரதாண்டவம், கௌரிதாண்டவம் ஆடிய ஐதீக நிகழ்வு நடைபெற்றது.

பின்னா், நடராஜா் சந்நிதியில் மயில் உருவில் கௌரிதாண்டவ காட்சியும், அபயாம்பிகை அம்மன் சாபம் நீங்கி அம்பிகை உருவம் கொண்ட நிகழ்வும் நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக வியாழக்கிழமை இரவு திருக்கல்யாணமும், சனிக்கிழமை (நவ.15) திருத்தோ் உற்சவமும், சிகர விழாவாக கடைமுகத்தீா்த்தவாரி ஞாயிற்றுக்கிழமையும் (நவ.16) நடைபெறவுள்ளது.