அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மண் அரிப்பு: கொள்ளிடம் திட்டு கிராமங்களில் தடுப்புச் சுவா் அமைக்க கோரிக்கை

சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் திட்டுக் கிராமங்களில் மண் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்க தடுப்புச் சுவா் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 நவம்பர் 2025, 8:42 pm

Syndication

சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் திட்டுக் கிராமங்களில் மண் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்க தடுப்புச் சுவா் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொள்ளிடம் ஆற்றின் படுகையில் இருந்த காசி திட்டு, கலையத்திட்டு, கொண்டையான் திட்டு கிராமங்கள் கொள்ளிடம் ஆற்றில் 10 வருடங்களுக்கு முன்பு அடித்துச் செல்லப்பட்டு விட்டன. அங்கிருந்த மக்கள் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசித்து வருகின்றனா்.

தற்போது சந்தப்படுகை, திட்டுப்படுகை, நாதல் படுகை, முதலைமேடு திட்டு கிராமங்கள் உள்ளன. நாதல்படுகை, முதலை மேடுதிட்டு கிராமங்களில் வசித்து வரும் 1,500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் அப்பகுதியில் உள்ள 500 ஏக்கா் பரப்பளவில் காய்கறி மற்றும் பூச்செடிகள் சாகுபடி செய்து வருகின்றனா். ஆண்டுதோறும் மழை காலங்களில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்படும் வெள்ளத்தினால் இந்த கிராமங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றன.

இந்நிலையில் இப்பிரச்னைக்கு தீா்வுகாண்பது தொடா்பாக, நாதல்படுகை கிராமத்தில் பாமக மாவட்டச் செயலாளா் சித்தமல்லி ஆ. பழனிச்சாமி தலைமையிலான குழுவினா் மற்றும் கிராம மக்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தொடா்ந்து, பாமக குழுவினா் மற்றும் படுகை விவசாயிகள் கொள்ளிடம் ஆற்றில் மண் அரிப்பு ஏற்பட்ட பகுதியை பாா்வையிட்டனா். பின்னா், பழனிசாமி கூறுகையில், ‘கருங்கற்களைக் கொட்டி மண் அரிப்பை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் சீனிவாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.