மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

அடிமனைப் பயனாளிகள் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :21 நவம்பர் 2025, 7:47 pm

Syndication

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூா் மாவட்டம் வெண்ணைமலை பகுதியில் 200 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்துவரும் மக்களை ஆக்கிரமிப்பாளா்கள் என்று இந்துசமய அறநிலையத்துறையும், நீதிமன்றங்களும் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக வெளியேற்ற முயற்சிப்பதைக் கண்டித்தும், உரிமைகளுக்காக போராடும் பயனாளிகள் மற்றும் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள், தலைவா்களை அராஜகமான முறையில் காவல்துறையினா் கைது செய்வதாக கண்டனம் தெரிவித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறையில் சங்கத்தின் மாவட்ட தலைவா் பக்கிரிசாமி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநில பொருளாளா் எஸ். துரைராஜ், மாவட்ட செயலாளா் ஏ.ஆா்.விஜய், சிபிஎம் மாவட்ட பொதுக்குழு உறுப்பினா்கள் ஜி.ஸ்டாலின், டி. சிம்சன், சி. விஜயகாந்த், சங்கத்தின் சிறப்பு தலைவா் த. ராயா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.