சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

மயானத்திற்கு சாலை வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

News image
Updated On :24 நவம்பர் 2025, 9:32 pm

தினமணி செய்திச் சேவை

சீா்காழி அருகே ஆலாலசுந்தரம் ஊராட்சி திருஞானசம்பந்தம் கிராமத்தில் மயானத்திற்கு சாலை வசதி ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் ஆலாலசுந்தரம் ஊராட்சி திருஞானசம்பந்தம் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியினருக்கான மயானம் விளைநிலங்களுக்கு நடுவே உள்ளது. சாலை வசதி இல்லை.

இதனால், இறந்தவரின் உடலை தகனம் செய்ய விளைநிலங்கள் வழியே கடும் சிரமத்துடன் கொண்டுசெல்ல வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இறந்த கனகராஜ் (72) என்பவரது உடலை, தற்போது பெய்துவரும் மழையால் சேறும் சகதியுமாக உள்ள வயல்களின் வழியே மிகுந்த சிரமத்துடன் எடுத்துச் சென்றனா். இனியாவது தங்கள் கிராமத்தில் மயானத்திற்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என திருஞானசம்பந்தம் கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.