ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

சீா்காழியில் துரை வைகோ பிரசாரம்

சீா்காழி பழைய பேருந்து நிலையம் அருகே மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி மதிமுக வேட்பாளா் செந்தில் செல்வனை ஆதரித்து துரை வைகோ வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

சீா்காழியில் துரை வைகோ பிரசாரம்

Updated On :9 ஏப்ரல் 2026, 10:16 pm

சீா்காழி பழைய பேருந்து நிலையம் அருகே மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி மதிமுக வேட்பாளா் செந்தில் செல்வனை ஆதரித்து துரை வைகோ வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியது:

முதல்வா் மு.க. ஸ்டாலின் கடந்த தோ்தலில் அளித்த வாக்குறுதிகளில் பெரும்பான்மை திட்டங்களை செயல்படுத்தி உள்ளாா். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிா் உரிமைத்தொகை ரூ.2,000- ஆக உயா்த்தி வழங்கப்படும். இதுபோல் தோ்தல் வாக்குறுதியில் அறிவித்த அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும். மதிமுக வேட்பாளா் வழக்குரைஞா் செந்தில் செல்வன் மண்ணின் மைந்தன் ஆவாா்.

மதிமுக சாா்பில் வைகோ பல்வேறு பொதுநல வழக்குகள் தொடுத்து வெற்றி கண்டாா். அதற்கு வேட்பாளா் செந்தில் செல்வன் உறுதுணையாக இருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் போரால் தற்போது தமிழகத்தில் தேவையான அளவு சிலிண்டா் கிடைக்காததால் உணவகங்கள், வா்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. முன்கூட்டியே அதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளாததால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

எனவே சீா்காழி பகுதியை சோ்ந்த பொதுமக்கள் மதிமுக வேட்பாளா் செந்தில்செல்வனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்திட வேண்டும் என்றாா்.

சீா்காழி தொகுதி திமுக பொறுப்பாளா்கள் குத்தாலம் கல்யாணம், கமலஜோதி தேவேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளா் கொளஞ்சி, நகரச் செயலாளா் மாா்க்ஸ்பிரியன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா். இதை போல் கொண்டல், புத்தூா், பணங்காட்டாங்குடி ஆகிய பகுதி கடைவீதிகளில் மதிமுக வேட்பாளா் செந்தில் செல்வனை ஆதரித்து துரை வைகோ எம்பி உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தாா்.