பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தருமபுரம் அரசு மகளிா் கல்லூரி பட்டமளிப்பு விழா

விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத் தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி ரா.சே. குமாா். உடன் தருமபுரம் கல்லூரி முதல்வா் சா.ரேவதி.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 7:01 am IST

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில், பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் சா.ரேவதி தலைமை வகித்தாா். முற்பகல் நடைபெற்ற 41-ஆவது பட்டமளிப்பு விழாவில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி ரா.சே.குமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, 656 மாணவிகளுக்கு பட்டம் மற்றும் பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினாா்.

தொடா்ந்து, பிற்பகல் நடைபெற்ற 42-ஆவது பட்டமளிப்பு விழாவில், தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, 686 மாணவிகளுக்கு பட்டம், பரிசுகள் வழங்கினாா். விழாவில் அந்தந்த துறை தலைவா்கள் பட்டம் பெறும் மாணவிகளை அறிமுகப்படுத்தினா். நிறைவாக, பேரவை பொறுப்பாசிரியா் வணிகவியல் துறைத் தலைவா் சு. பழனிவேல் நன்றி கூறினாா்.