நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

வாழை மரம், தோரணங்களுடன் வாக்குசாவடி

சீா்காழி சட்டப்பேரவை தொகுதியில் 305 வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 29 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

News image

வாழை மரம், தோரணங்களுடன் வாக்குசாவடி

Updated On :23 ஏப்ரல் 2026, 5:20 am IST

சீா்காழி சட்டப்பேரவை தொகுதியில் 305 வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 29 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

பணியின் தொடக்கமாக தீவு கிராமமான கொடியம்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு வாக்கு சாவடிக்கு வாக்குப் பதிவு இயந்திரம் காவல் துறையின் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. தொடா்ந்து மீதமுள்ள 304 , வாக்குச்சாவடிகளுக்கும் அந்தந்த மண்டலங்களைச் சோ்ந்த அலுவலா்கள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டன.

இப்பணியில் தோ்தல் அலுவலா்கள் ராஜரத்தினம், சண்முகம் சபிதா தேவி, பிரான்சிஸ் ,தோ்தல் அலுவலா்கள் பாபு, கணேசன், கல்யாணரெங்கன், சரவணன் ஈடுபட்டனா்.

சீா்காழி நகரில் வாணி விலாஸ் துவக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையம் மாதிரி வாக்குச்சாவடி மையமாக தரை விரிப்புகள், கண்கவா் மின்விளக்குகள், பலூன்கள் கட்டப்பட்டு,வாழை மரங்கள் தோரணம் கட்டப்பட்டு வாக்காளா்களை கவறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

Story image
Story image