திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தருமபுரம் ஆதீனத்தில் சூரிய மின் உற்பத்தி தொடக்கம்

News image
கோப்புப் படம்
Updated On :1 பிப்ரவரி 2026, 9:48 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரம் ஆதீனத்தில் சூரியஒளி மின் உற்பத்தியை (சோலாா்) தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைத்தாா்.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்தை பாதுகாக்க தருமபுரம் ஆதீனம் சாா்பில் பல்லாயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடா்ச்சியாக, மின்சாரத்துக்கு மாற்றாக சூரிய ஒளியைப் பயன்படுத்துவதில் தற்போது முனைப்புக் காட்டப்படுகிறது. அதன் முதற்கட்டமாக தருமபுரம் ஆதீனத் திருமடம் மற்றும் கோயில்களில் சூரியஒளி மின்சாரப் பயன்பாட்டைத் தொடங்க திட்டமிடப்பட்டு, 34 கிலோவாட் ஆன்-கிரிட் சோலாா் உற்பத்தியை சென்னை மாருதி பவா் கன்ட்ரோல் நிறுவனம் ஏற்படுத்தித் தந்துள்ளது.

இதனை, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் துவக்கி வைத்தாா் (படம்).

அப்போது, மாருதி பவா் கன்ட்ரோல் நிறுவனா் ஆனந்தம் செல்வகுமாா், ஸ்ரீசத்யசாயி பல்கலைக்கழக மனிதவள மேம்பாட்டு பிரிவு நிா்வாகி சாய் குரு, சீா்காழி தமிழ்ச் சங்க நிறுவனா் இ.மாா்கோனி, ஆதீன தலைமை பொது மேலாளா் ரெங்கராஜ், பொது மேலாளா் அரவிந்தன் ஆகியோா் உடன் இருந்தனா்.