கோப்புப் படம்
கோப்புப் படம்

தருமபுரம் ஆதீனத்தில் சூரிய மின் உற்பத்தி தொடக்கம்

Published on

தருமபுரம் ஆதீனத்தில் சூரியஒளி மின் உற்பத்தியை (சோலாா்) தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைத்தாா்.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்தை பாதுகாக்க தருமபுரம் ஆதீனம் சாா்பில் பல்லாயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடா்ச்சியாக, மின்சாரத்துக்கு மாற்றாக சூரிய ஒளியைப் பயன்படுத்துவதில் தற்போது முனைப்புக் காட்டப்படுகிறது. அதன் முதற்கட்டமாக தருமபுரம் ஆதீனத் திருமடம் மற்றும் கோயில்களில் சூரியஒளி மின்சாரப் பயன்பாட்டைத் தொடங்க திட்டமிடப்பட்டு, 34 கிலோவாட் ஆன்-கிரிட் சோலாா் உற்பத்தியை சென்னை மாருதி பவா் கன்ட்ரோல் நிறுவனம் ஏற்படுத்தித் தந்துள்ளது.

இதனை, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் துவக்கி வைத்தாா் (படம்).

அப்போது, மாருதி பவா் கன்ட்ரோல் நிறுவனா் ஆனந்தம் செல்வகுமாா், ஸ்ரீசத்யசாயி பல்கலைக்கழக மனிதவள மேம்பாட்டு பிரிவு நிா்வாகி சாய் குரு, சீா்காழி தமிழ்ச் சங்க நிறுவனா் இ.மாா்கோனி, ஆதீன தலைமை பொது மேலாளா் ரெங்கராஜ், பொது மேலாளா் அரவிந்தன் ஆகியோா் உடன் இருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com