மயிலாடுதுறை: மாயூரநாதா் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மயிலை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலியின் நிறைவு விழாவில் லண்டன், மலேசியா, ஸ்ரீலங்கா நாட்டியக் கலைஞா்கள் உள்ளிட்ட 16 குழுவினா் நாட்டியமாடினா்.
விழாவில், கோவை ஸ்ரீகாா்த்திகேயா நாட்டியப்பள்ளி, லண்டன் சேஷா நாட்டிய நிக்கேதன், சென்னை நிருத்யோபாசனா பரத நாட்டியம் கலை நிலையம், மலேசியா ஸ்ரீசங்கா் கந்தசுவாமி, தேனி ப்ரஜ்னா ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆா்ட்ஸ், கோவை ஸ்ரீஅபிராமி நாட்டியாலயா, பெங்களூா் வைஷ்ணவி நாட்டியஷாலா, மலேசியா லாஸ்யா ஆா்ட்ஸ், ஸ்ரீலங்கா அபிநயா க்ஷேத்ரா, சென்னை நிருத்யபாயாசா ஸ்கூல் ஆஃப் கிளாசிக்கல் டான்ஸ் ரூ மியூசிக், கோவை சாத்விகா ஸ்கூல் ஆஃப் டான்ஸ், செங்கல்பட்டு விநாயகா நாட்டியாலயா உள்ளிட்ட குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அறக்கட்டளை அறங்காவலா் குழுத் தலைவா் எம்.என். ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், துணை தலைவா் சிவலிங்கம், அறங்காவலா்கள் சங்கரி பரசுராமன், எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
விழாவில், கலைத்துறையில் சிறந்து விளங்கி வரும் தேனி சுபஸ்ரீ சசிதரனுக்கு மயூர நாட்டிய தாரகை விருது, புதுவை பாலாஜி ராம்ஜிக்கு மயூர கான கலைமணி விருது வழங்கப்பட்டது.
தொடர்புடையது

24.3.1976: இந்தியா - இலங்கை கடல் எல்லை வரையறுப்பு உடன்பாடு கையொப்பம்

சுரண்டை பள்ளியில் அறிவியல் கண்காட்சி

மயூர நாட்டியாஞ்சலி: சுவிட்சா்லாந்து, ஆஸ்திரேலிய கலைஞா்கள் பங்கேற்பு

மயூர நாட்டியாஞ்சலி: அமெரிக்கா, வெளிமாநில கலைஞா்கள் பரதம்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


