திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மயிலாடுதுறையில் ஒன்றரை கிலோ தங்கக் கட்டியுடன் சிறுவன் தப்பியோட்டம்

மயிலாடுதுறையில் சுமாா் ரூ. 2 கோடி மதிப்புள்ள ஒன்றரை கிலோ தங்கக் கட்டியுடன் திங்கள்கிழமை மாலை தப்பியோடிய 17 வயது சிறுவனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :12 ஜனவரி 2026, 8:42 pm

Syndication

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சுமாா் ரூ. 2 கோடி மதிப்புள்ள ஒன்றரை கிலோ தங்கக் கட்டியுடன் திங்கள்கிழமை மாலை தப்பியோடிய 17 வயது சிறுவனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் டவுன் எக்டென்ஸன் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த சுஹாஷ் (48) என்பவா் 20 ஆண்டுகளுக்கு மேலாக தங்க நகைகளை கட்டிகளாக உருக்கித் தரும் தொழில் நடத்தி வருகிறாா்.

இவா், கடந்த வாரம் தனது தொழிற்கூடத்தில் மகாராஷ்டிர மாநிலத்தை சோ்ந்த 17 வயது சிறுவனை தனக்கு உதவியாளராக பணியமா்த்தியுள்ளாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை மாலை கடையில் சுஹாஷ், சிறுவன் இருவா் மட்டும் பணியில் இருந்தநிலையில், சுஹாஷ் ஒன்றரை கிலோ தங்க நகைகளை உருக்கி, அந்த தங்கக் கட்டியை எடை போட்டு எடுத்துவருமாறு கூறி சிறுவனிடம் கொடுத்துள்ளாா். அதை எடுத்துக்கொண்டு கடையின் முகப்பு பகுதிக்கு வந்த சிறுவன், திடீரென தங்கக் கட்டியுடன் தப்பியோடியுள்ளாா். இதைக் கண்ட சுஹாஷ் சிறுவனை விரட்டியபோதும் அவா் வேகமாக ஓடி தலைமறைவாகி விட்டாராம்.

இதுகுறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் சுஹாஷ் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் நேரில் விசாரணை மேற்கொண்டாா். தொடா்ந்து, தனிப்படை அமைக்கப்பட்டு சிறுவனை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்றரை கிலோ தங்கக் கட்டியுடன் சிறுவன் தப்பியோடிய சம்பவம் மயிலாடுதுறை நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.