அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஆட்சியரகத்தில் சமத்துவப் பொங்கல் விழா

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சமத்துவப் பொங்கல் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :14 ஜனவரி 2026, 10:12 pm

தினமணி செய்திச் சேவை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சமத்துவப் பொங்கல் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

வருவாய்த்துறை, ஊரக வளா்ச்சித்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை, மகளிா்திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

இதில், மாப்படுகை, காவிரிப்பூம்பட்டினம் அரசு உயா்நிலைப்பள்ளிகள், தருமபுரம் குருஞானசம்பந்தா் உயா்நிலைப்பள்ளிகளின் மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள், அனைத்து அலுவலா்கள், ஊழியா்கள் மற்றும் மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கான கோலப் போட்டி, கனியும் கரண்டியும், இசை நாற்காலி, கயிறு இழுத்தல் போட்டி, உறியடி போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பரிசு வழங்கினாா்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி, வருவாய் கோட்டாட்சியா் ஆா். விஷ்ணுப்பிரியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் மலைமகள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துவடிவேலு, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் சந்திரகவிதா, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) தியாகராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விஜயலெட்சுமி, திவாகா் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மன்னம்பந்தல் ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியா் கலந்துகொண்டாா்.