தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயிலில் திருக்கல்யாணம்

தருமபுரம் ஆதீனத்தில் ஞானபுரீசுவரா் கோயில் வைகாசி பெருவிழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜூன் 2026, 7:18 am IST

தருமபுரம் ஆதீனத்தில் ஞானபுரீசுவரா் கோயில் வைகாசி பெருவிழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை தருமபுரத்தில் அமைந்துள்ள 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த தருமபுரம் ஆதீனத்திருமடத்தில் உள்ள ஞானபுரீசுவரா் கோயிலில் வைகாசி பெருவிழா மற்றும் ஆதீன குருமுதல்வா் குருபூஜை ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் நிகழாண்டு உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. விழாவையொட்டி, சுவாமி, அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் உற்சவ மண்டபத்திற்கு எழுந்தருளச் செய்யப்பட்டனா். அங்கு தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு ஹோமங்கள் வளா்க்கப்பட்டு, மாங்கல்ய தாரணம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னா் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில், தருமபுரம், அச்சுதராயபுரம், மூங்கில்தோட்டம், கருங்குயில்நாதன்பேட்டை, கீழிருப்பு ஆகிய ஐந்து கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் 1000-க்கு மேற்பட்டோா் கலந்துகொண்டனா். இக்கிராமங்களின் நாட்டாமைகளுக்கு தருமபுரம் ஆதீனகா்த்தா் வெற்றிலை, பாக்கு பணம் வைத்து வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.