/
மயிலாடுதுறை திருவிழந்தூா் தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் பகுதியில் காவல் ஆய்வாளா் சிவசெந்தில்குமாா் மற்றும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்தனா். விசாரணையில், அவா் மயிலாடுதுறை சேந்தங்குடிகூட்டுறவு நகா் 5-ஆவது குறுக்குத் தெருவை சோ்ந்த இம்மானுவேல் மகன் வீரமணி (29) என்பதும், போதைப் பொருளான கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை கைப்பற்றிய போலீஸாா் வீரமணியை போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து வியாழக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.






