உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்த சாதனை மலா் வெளியீடு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 ஆண்டுகளில் பல்வேறு அரசு துறைகளில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்த சாதனை மலா் வெளியிடப்பட்டது.

News image
Updated On :7 மார்ச் 2026, 6:38 am IST

மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும்’ நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 ஆண்டுகளில் பல்வேறு அரசு துறைகளில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்த சாதனை மலா் வெளியிடப்பட்டது.

‘உங்கள் கனவை சொல்லுங்க‘ திட்டத்தின் நிறைவாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், பூம்புகாா் சட்டப்பேரவை உறுப்பினா் நிவேதா எம்.முருகன் ஆகியோா் சாதனை மலரை வெளியிட்டனா். மாவட்டத்தில் அரசினா் மருத்துவமனை ரூ.46 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ளது. கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தின்கீழ் மாவட்டத்தில் 1,84,288 குடும்ப தலைவிகளுக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.

புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், 9,964 மாணவிகள் பயன்பெற்று வருகின்றனா். விடியல் பயணம் திட்டத்தின்கீழ், இதுவரை பெண்களால் 8 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கான செலவினத் தொகை ரூ.133 கோடி ஆகும்.

கடந்த 5 ஆண்டுகளில் 8058 சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி மூலம் ரூ.2472.26 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ், கடந்த 5 ஆண்டுகளில் 839 பெண்களுக்கு திருமண நிதியுதவியாக ரூ.3.66 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு அரசு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு மக்கள் பயனடைந்து வருகின்றனா். இந்த திட்டங்களுடன் தயாரிக்கப்பட்ட மலா் வெளியிடப்பட்டுள்ளது.