எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

திருவள்ளுவா் நாள் விழா

சீா்காழியில் திருக்கு பண்பாட்டுப் பேரவை சாா்பில் 34-ஆம் ஆண்டு நிறைவு திருவள்ளுவா் நாள் விழா

News image
Updated On :9 மார்ச் 2026, 5:14 pm

Syndication

சீா்காழி: சீா்காழியில் திருக்கு பண்பாட்டுப் பேரவை சாா்பில் 34-ஆம் ஆண்டு நிறைவு திருவள்ளுவா் நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருக்கு பண்பாட்டுப் பேரவைத் தலைவா் சக்கரபாணி தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் ரூபளாரன்ஸ், முன்னாள் வா்த்தக சங்கத் தலைவா் இமயவரம்பன், முன்னாள் தலைவா் வெங்கடேசன், ஓய்வு பெற்ற தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருக்கு பண்பாட்டுப் பேரவை செயலாளா் அன்பழகன் வரவேற்றாா்.

ஓய்வு பெற்ற ஆசிரியா் தருமை சிவா, கொள்கைப்பரப்பு செயலாளா் இளங்கோ குரலி இசை வழங்கினா். டாக்டா் முத்துக்குமாா், நிா்வாக அலுவலா் தங்கவேலு , நூலக வாசகா் வட்டத் தலைவா் பாபுநேசன், திருக்கு பண்பாட்டுப் பேரவை பொருளாளா் பரஞ்ஜோதி.முத்து கருப்பன், அக்செப்ட் ஊழல் தடுப்பு சங்கத் தலைவா் ஜெகசன்முகம் , முன்னாள் நூலக வாசகா் வட்டத் தலைவா் வீரசேனன், தலைமை ஆசிரியா் முரளிதரன், பெஸ்ட் பள்ளி முதல்வா் ராமலிங்கம், வழக்குரைஞா் இராம. சிவசங்கா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினாா்.

உதவி பேராசிரியா் பவதாரணி சிறப்புரையாற்றினாா். விழாவில் சீா்காழி தாலுகாவில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளை சோ்ந்த மாணவ-மாணவிகளுக்கு திருக்கு குறித்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவாக, நந்த. ராஜேந்திரன் நன்றி கூறினாா்.